காதலியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காதலன்...3 மாதம் வாழ்ந்துவிட்டு “சாதியை காரணம் காட்டி கழட்டிவிட்ட கொடுமை...!

காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்  இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்

காதலியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காதலன்...3 மாதம் வாழ்ந்துவிட்டு “சாதியை காரணம் காட்டி கழட்டிவிட்ட கொடுமை...!

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியை  சேர்ந்தவர் பெருமாள் மகள் கவுசல்யா. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கண்ணனூர் ஊரைச் சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவருக்கும் இடையே ஐடிஐயில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

படிப்பு முடிந்ததும் இருவரும் சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ளனர். சென்னையில் இருவரும் தங்கி வேலை செய்து வந்து நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். சென்னையில் மூன்று மாதங்கள் வசித்து வந்தநிலையில், இளம்பெண் கர்பமடைந்துள்ளார்.

அதன்பின்னர் இருவரும் திண்டுக்கல் வந்துள்ளனர். திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணின் அனுமதி இல்லாமல் கருகலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் காதல் மனைவியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த கணவர், முறைப்படி தனது பெற்றோருடன் வந்து பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போது திருமணம் செய்ய முடியாது என்றும் தனது ஜாதியை சுட்டிக்காட்டி சேர்ந்து வாழ முடியாது எனவும் மகுடீஸ்வரன் தனது சகோதரர் விக்னேஷ் குமார் மற்றும் நண்பர்கள் மூகேந்திரன் அகதிஸ் ஆகியோரூடன் சேர்ந்து மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஏற்கனவே ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளரை கண்டித்தும் காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.