சாலை மறியலால் வாகனங்கள் இன்றி நடந்து சென்ற புதுமண தம்பதிகள் !!

சாலை மறியலால் வாகனங்கள் இன்றி நடந்து சென்ற புதுமண தம்பதிகள் !!

கறம்பக்குடி அருகே நடைபெற்ற சாலை மறியலால், புதுமண தம்பதிகள் வாகனங்கள் இன்றி நடந்தே சென்ற சம்பவம் அரங்கேறியது.

புதுக்கோட்டை மாவட்டம், செங்கமேடு கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து, புதுக்கோட்டை - தஞ்சாவூர் இணைப்பு சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்கொள்முதல் நிலையம் திறக்காததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக குற்றம்சாட்டினர். மறியல் காரணமாக, அங்குள்ள இணைப்பு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்நிலையில், அவ்வழியே வந்த புதுமண தம்பதிகள் வாகனங்கள் இன்றி நடந்தே சென்றனர்.