கணவரின் தட்டிலிருந்த உணவெடுத்து குழந்தைக்கு ஊட்டிய மனைவி... வெறித்தனமாக தாக்கிய கொடூரம்!!

கணவரின் தட்டிலிருந்த உணவெடுத்து குழந்தைக்கு ஊட்டிய மனைவியை சரமாரியாகத் தாக்கி காயப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவரின் தட்டிலிருந்த உணவெடுத்து குழந்தைக்கு ஊட்டிய மனைவி... வெறித்தனமாக தாக்கிய கொடூரம்!!

சென்னை வில்லிவாக்கம் திருவெங்கையா தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன். இவருக்கு ஹரிதா என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வேலையை முடித்து வீட்டிற்கு வந்த கிரிதரனுக்கு மனைவி ஹரிதா உணவு பறிமாரியுள்ளார். கிரிதரன் சாப்பிட்டு கொண்டிருந்த போது கிரிதரன் தட்டிலிருந்த சோற்றை எடுத்து தனது இரண்டரை வயது குழந்தைக்கும் ஊட்டியுள்ளார் ஹரிதா.

இதனால் ஆத்திரமடைந்த   கிரிதரன் ஆபாசமான வார்த்தைகளால் ஹரிதா-வை திட்டி அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

கிரிதரன் தாக்கியதில் காயமடைந்த ஹரிதாவின் பற்கள் உடையவே கோபமடைந்த அவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கணவர் கிரிதரன் மீது புகார் அளித்தார்.

ஹரிதா அளித்த புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீசார் கிரிதரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கிரிதரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.