கர்ப்பிணி மனைவியை எரித்து கொன்ற கணவன்... வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததால் வெறிச்செயல்...

மதுரை மாவட்டம் சோழவந்தான் ராயபுரத்தை சேர்ந்த சகாயராஜ் - செல்வமேரியின் மகள் கிளாடிஸ்ராணி (வயது21). இவர் அவனியாபுரம் அருகே உள்ள தனியார் காலேஜில் படித்துவந்தார்.

கர்ப்பிணி மனைவியை எரித்து கொன்ற கணவன்... வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததால் வெறிச்செயல்...

கிளாடிஸ்ராணிக்கும் ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. காதல் கண்ணை மறைக்க இருவரும் நெருங்கிப் பழகி அத்துமீறிய நிலையில் கர்ப்பமாகியிருக்கிறார் கிளாடிஸ்ராணி. கர்ப்பமடைந்து 3 மாதங்கள் கழிந்த நிலையில் பெண்ணின் பெற்றோருக்கு விஷம் தெரியவர யார் காரணம் என்று விசாரிக்கும்போதுதான், தன் காதல் விஷத்தை சொல்லியிருக்கிறார்.

வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரை காதலித்தாகதாகவும், அவர்தான் கர்ப்பத்திற்கு காரணம் என்றும்  கிளாடிஸ் ராணி சொல்ல, உடனே ஜோதிமணியை அழைத்துப் பேசியுள்ளனர் கிளாடிஸ்ராணின் பெற்றோர்கள். 

காதலியிடம் உல்லாசம் அனுபவித்த ஜோதிமணிக்கு கல்யாணம் பண்ண விருப்பமில்லாமல், அந்த கர்ப்பத்திற்கு காரணம் இல்லை என்று முரண்டு பிடித்திருக்கிறார். முரண்டுபிடித்தவரை சமாதானப்படுத்தி, அவரின் பெற்றோருக்கே தெரியாமல் கிளாடிஸ்ராணியின் பெற்றோர் இருவருக்கும் கடந்த 2ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.

வேண்டா வெறுப்போடு திருமணம் செய்த ஜோதிமணி, கடந்த 4ஆம் தேதி பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்வதாக கிளாடிஸ்ராணியை அழைத்துச் சென்றவர், அங்கு போகாமல், அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள முட்புதரில் எரித்துக் கொலை செய்துவிட்டார்.

அத்துடன், மனைவியை காணவில்லை என்று  கிளாடிஸ்ராணியின் பெற்றோரிடம் கூறியதால், சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இந்தப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியிடம் விசாரணை நடத்திவந்த நிலையில், மனைவியை எரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார் ஜோதிமணி. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோதிமணி தனியாக கொலைசெய்தாரா? வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து 2ஆவது நாளே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.