மக்களே உஷார்! பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்களே உஷார்! பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டை தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அதிகாரிகள் ஏற்றியுள்ளனர்.

இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் படகுகளை பத்திரமாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.