பெற்ற தாயை நடுரோட்டில் வைத்து தாக்கும் கொடூர மகன்...

நாமக்கல் அருகே பணத்திற்காக தாயை அடித்து நடுரோட்டில் தரதரவென இழுத்து தாக்கும் மகனின் கொடூர செயல் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பெற்ற தாயை  நடுரோட்டில் வைத்து தாக்கும் கொடூர மகன்...

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள். இவரது கணவர் சின்னச்சாமி கடந்தாண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்த நிலையில், நல்லம்மாள் தனியாக இருந்து கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவரது மகன் சண்முகம் நல்லம்மாளிடம் உள்ள வீடு மற்றும் நகை விற்ற பணத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நல்லம்மாளை சந்தித்த மகன் சண்முகம் மற்றும் அவரது மனைவி ஜானகி ஆகியோர் வீட்டை எழுதி தரும்படி பிரச்னை செய்துள்ளனர். இதற்கு நல்லம்மாள் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த மகன் மற்றும் மருமகள், அவரின் கையை பிடித்து தரதரவெனு சாலையில் இழுத்து அடித்து உதைத்துள்ளனர். பெற்ற தாயை மருமகளுடன் சேர்ந்து மகன் தாக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, படுகாயமடைந்த நல்லமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நல்லம்மாள் கூறுகையில், தான் வைத்திருக்கும் பணத்திற்காகவும் குடியிருக்கும் வீட்டினை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என மகன் அடித்து துன்புறுத்துவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.