காட்டு யானையை எதிர்த்து நின்ற காளைமாடு.. வைரல் வீடியோ

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதிக்குள் காட்டு யானையை பார்த்து காளைமாடு எதிர்த்து நின்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

காட்டு யானையை எதிர்த்து நின்ற காளைமாடு.. வைரல் வீடியோ

தமிழக மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ளது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.இந்த புலிகள் காப்பகத்தில் புலிகள் உள்பட யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் மாதேஷ் என்ற இளைஞர் ஒருவர் வனப்பகுதிக்குள் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு காட்டு யானை வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வந்தது.

யானை எதிரே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாதேஷ் சுதாரித்துக்கொண்டு தனது மாடுகளை அழைத்துக்கொண்டு தப்ப முயன்றார்.

அப்போது அவர் வளர்த்து வரும் காளைமாடு ஒன்று யானையை நோக்கி ஆவேசமாக பார்த்து முறைக்க ஆரம்பித்தது.பின்னர் யானையை விடாமல் எதிர்த்து நின்று துரத்த ஆரம்பித்ததால், யானை மெதுவாக வனப்பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தது.

இதனை மாதேஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது நடிகர் வடிவேல் அவர்களின்  “இது அதுள்ள,எப்படியாவது தப்பிச்சு ஓடிடுடா புல்லட்டுபாண்டி” என்ற மாஸ் காமெடி தான் நினைவில் வருகிறது.