தந்தையின் சித்திரவதை தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன்..  

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தந்தையின் சித்திரவதையால் வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனை போலீசார், காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தந்தையின் சித்திரவதை தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன்..   

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தந்தையின் சித்திரவதையால் வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனை போலீசார், காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி - மீனா தம்பதி. இவர்களுக்கு ஜோதிபாஸ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சமையல் மாஸ்டரான கருப்பசாமி, வேலை முடிந்து வீட்டுக்கு வந்து, ஜோதிபாசுவை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுவன் ஜோதிபாசு, வீட்டை விட்டு வெளியேறி, திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். 2 நாளாக சுற்றிய நிலையில் பலூன் வியாபாரி ஒருவரிடம் சாப்பாடு வாங்கித் தருமாறு கேட்டுள்ளான். அப்போது, சிறுவனை பலூன் வியாபாரி விற்க முயற்சி செய்வதாக கூறி, அப்பகுதி மக்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவனது தந்தை குறித்து தெரியவந்த நிலையில், போலீசார், சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவனின் படிப்பு செலவை காவல் ஆய்வாளர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.