தாயகம் திரும்பிய மீனவர்கள்... சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த தமிழக அரசு...

தாயகம் திரும்பிய மீனவர்கள்... சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த தமிழக அரசு...
Published on
Updated on
2 min read

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட  15 ராமநாதபுரம் மீனவா்கள் சென்னை வந்தனா் .

தமிழ்நாடு ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த  மீனவர்கள் வினோத், நம்புமிலன், காளிமுத்து, எபினேசர், கிருஷ்ணன் உள்பட 15 பேர்  இந்த மாதம் 5ந் தேதி  இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து  கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 15 மீனவர்களை கைது செய்தனா்.படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையில் அடைத்தனா். 

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில  அரசுகள் எடுத்த  நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேசினார்கள். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் இராமேஸ்வரம்  மீனவர்கள் 15 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

15 மீனவா்களுக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை  விமான நிலையத்தில் மீனவர்களை பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். 
பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com