அண்ணாமலை பல்கலைக்கழகம் : தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

அண்ணாமலை பல்கலைக்கழகம் : தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான அனந்தராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்...தேதி அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், நியமனங்களிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார்.

எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாகத்தை கண்காணிக்க குழு ஒன்று அமைத்து உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.