பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது... பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...

பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் கொய்யானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது... பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...
பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டது என்ற புகார் பொய்யானது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
 
மதுரை ஆத்திக்குளம் பகுதியில், பாஜக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவிற்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெகாசஸ் மூலம் அரசியல் தலைவர்களின் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
தனிமனித கருத்துரிமைக்கு பாஜக எப்போதும் மதிப்பளிக்கும் என்றும், ஒட்டு கேட்கும் விவகாரம் யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சித்தாந்தம் அடிப்படையில் திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்றும் கூறினார்.