ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒலிம்பியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மாண்டாவா ஹோல்டிங்கஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள அரசு நிலம், நீர்நிலை மற்றும் பூங்கா ஆகியவற்றை ஒலிம்பியா நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார். 

இதன் காரணமாக பொதுமக்களால் அந்த பகுதியை பயன்படுத்த முடியவில்லை என்பதால் ஒலிம்பியா நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பொதுசாலையை ஆக்கிரமித்து சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளதாகவும் 192 சதுர மீட்டர்  அளவுக்கு நீர்நிலையை ஆக்கிரமித்து கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருவதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஒலிம்பியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி அந்நிறுவனம் கார் நிறுத்துமிடம், சுற்றுசுவர் மற்றும் கேட் ஆகிய  ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், ஒலிம்பியா நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலை மற்றும் சாலையை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  செலவு ஐயாயிரத்திலிருந்து இரண்டாயிரமாக குறையும்....!!