நீட் தேர்வை நடத்த தயாராகுங்கள்... அண்ணாமலை பேட்டி...

விலக்கு கேட்பதை விட்டு விட்டு, நீட் தேர்வை நடத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

நீட் தேர்வை நடத்த தயாராகுங்கள்... அண்ணாமலை பேட்டி...

விலக்கு கேட்பதை விட்டு விட்டு, நீட் தேர்வை நடத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, நீட் - ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானது கிடையாது என்றும், கடந்த தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் 100 இடங்களில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நீட் விலக்கு கோரிக்கையை விட்டுவிட்டு, 10 நாளில் நடக்க உள்ள நீட் தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க, தமிழக அரசு துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.