உங்களுக்கு தெரியுமா..? ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செஞ்சுருக்காங்களாம்!!

நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது .

உங்களுக்கு தெரியுமா..? ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செஞ்சுருக்காங்களாம்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், அதன் பிறகு 3 மணியிலிருந்து மாலை 7 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர பகுதிகளில்  காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், அதனை தொடர்ந்து 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நியாய விலை கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நியாய விலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து பணியாளர்களுக்கு தெரிவிப்பதோடு, குறித்த நேரத்தில் கடைகளை திறந்து செயல்படுத்துவதற்கு அறிவுறுத்துமாறு மாவட்ட  அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து நியாய விலை கடைகளிலும் மக்கள் அறியும் வகையில், வேலை நேரம் குறித்த விவரம்  தகவல் பலகையில் காட்சிபடுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் சம்பந்தபட்ட மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, குறித்த நேரத்தில் நியாய விலை கடைகள் திறந்து செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.