பெட்ரோல், டீசல் விலை உயர்வு... சேலத்தில் நூதன ஆர்ப்பாட்டம்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு... சேலத்தில் நூதன ஆர்ப்பாட்டம்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைஉயர்வால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் விதமாக நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.