படி.. படி... படி.. முன்னேறலாம்..ந.ரங்கசாமி..! சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்ட முதல்வர்...

தன்னிடம் ஆட்டோகிராப் கேட்ட சிறுவனுக்கு அன்புடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் புதுச்சேரி முதலமைச்சர்.

படி.. படி... படி.. முன்னேறலாம்..ந.ரங்கசாமி..! சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்ட முதல்வர்...
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேராவூரில் உடல்நலக்குறைவால் இறந்தார்.  அதனைத் தொடர்ந்து 16ஆம் நாள் காரியத்தில் பங்கேற்பதற்காக  பேராவூர் வந்தார்.  நிகழ்ச்சி முடிந்ததும் அவர் புறப்பட தயாரான போது ஒரு சிறுவன் ஓடிவந்ததை பார்த்த முதலமைச்சர் ரங்கசாமி காரில் இருந்து இறங்க என்ன வேண்டும் என்று அன்புடன் அந்த சிறுவனை பார்த்துக் கேட்டார். 
 
உடனே சிறுவன் தன் கையிலிருந்த நோட்டை நீட்டி “ஆட்டோகிராப் வேண்டும்” எனக் கூற, உடனே முதலமைச்சர் ரங்கசாமிநோட்டை வாங்கி, "நல்வாழ்த்துக்கள்; படி.. படி.. படி.. முன்னேறலாம்; ந.ரங்கசாமி" என கையெழுத்திட்டு கொடுத்தார்.  அதனை ஆர்வமாக வாங்கிச் சென்ற அச்சிறுவன், தனது சக நண்பர்களிடம், முதல்வர் கையெழுத்தை காட்டி மகிழ்ந்தான். முதலமைச்சரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.