மருத்துவமனையில் திடீரென பற்றி எரிந்த ஏசி..! நோயாளிகள் அவதி..!

மருத்துவமனையில் திடீரென பற்றி எரிந்த ஏசி..!   நோயாளிகள் அவதி..!


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கண்சிகிச்சை மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து தினதோறும் நூற்றுக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கண்சிகிச்சை பிரிவு  தனி கட்டிடத்தில் ஏசியில் இருந்து தீடிரென கரும்புகை வந்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அறையை விட்டு வெளியேற முயற்சித்தனர். 

அப்போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அறை  முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து, உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அறை முழுவதும் பரவி இருந்த தீயை அணைத்தனர். இதனால் அறையில் இருந்த மின் சாதன பொருட்களை முழுவதும் நாசமானது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மருத்துவமனை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இச்சம்பவ ம் குறித்து மருத்துவ நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க      | " கங்கையில் பதக்கங்களை வீசுவது போல் சென்று, எதுவும் செய்யாமல் திரும்பியது போராட்ட உக்திகளில் ஒன்று " - பிரிஜ் பூஷன்.