கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை...  டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்...

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை...  டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்...
கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது குறித்த வீடியோ வெளியான நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெங்கம்புதூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
 
இந்நிலையில் அந்த கடை ஊழியர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதை கேட்ட போது, அவர் ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அந்த ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.