கோயில்களில் இணையவழி மூலம் இதுவரை ரூ.200 கோடி வாடகை வசூல்...!

கோயில்களில் இணையவழி மூலம் இதுவரை ரூ.200 கோடி வாடகை வசூல்...!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இணையவழி வசதி மூலம் இதுவரை 200 கோடி ருபாய் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறநிலையத்துறையின் செய்திக் குறிப்பில், கோயில் இடங்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையைச் செலுத்தி, இணையம் மூலம் ரசீது பெறும் வசதி கொண்டு வரப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வசதியின் மூலம் இதுவரை வாடகைத் தொகை 200 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 30 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களுடன், அறநிலையத்துறையின் தீவிர நடவடிக்கைகளால் வாடகை தொகை மற்றும் நிலுவைத் தொகைகளின் வசூல் விரைவுப் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.