மதுபோதையில் டீக்கடையில் தகராறு.... கன்னத்தில் அறைந்தவர் மீது வெந்நீரை ஊற்றிய டீ மாஸ்டர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மதுபோதையில் டீக்கடையில் தகராறு செய்தவர் மீது, டீ மாஸ்டர் வெந்நீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபோதையில் டீக்கடையில் தகராறு.... கன்னத்தில் அறைந்தவர் மீது வெந்நீரை ஊற்றிய டீ மாஸ்டர்

புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனுநீதி. இவர் நேற்று மாலை மதுபோதையில் கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது டீ கடையில் இருந்த சர்க்கரை கின்னத்தில் ஈ கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த மனுநீதி சர்க்கரை கிண்ணத்தை மாற்றக்கோரி கடையில் இருந்த டீ மாஸ்டர் கார்த்திகோடு  வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அவரின் கன்னத்தில் பளார் என அறைந்ததாக சொல்லப்படுகிறது.   இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற டீ மாஸ்டர் தன் கையில் வைத்திருந்த வெந்நீரை மனுநீதியின் மேல் ஊற்றியுள்ளார்.

இதில் காயமடைந்த மனுநீதியை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் கந்தரவக்கோட்டை காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.