நேரலை ஒளிபரப்புக்கு தயாராகும் தமிழக சட்டப்பேரவை... புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்... 

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் வகையில், நவீன தொழில்நுட்ப முறையில் சட்டப்பேரவை வளாகம் புதுபிக்கப்பட்டு வருகிறது.

நேரலை ஒளிபரப்புக்கு தயாராகும் தமிழக சட்டப்பேரவை... புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்... 

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் அமரும் மேஜை மீது, நவீன முறையில் டச் ஸ்கிரின் கணிப்பொறிகள் வைக்கப்பட உள்ளன. 

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் போது, ஆளுநர் உரை நிகழ்த்துவது புனித ஜார்ஜ் கோட்டையாக இருந்தாலும் சரி, கலைவாணர் அரங்கம் என்றாலும் சரி, இரு இடத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கும் என்றும், அப்போதைய சூழலை பொறுத்து எங்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், சட்டப்பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

எனவே, புனித ஜார்ஜ் கோட்டையில் பேரவை கூட்டம் நடத்தப்பட்டால், அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.