இந்தியாவில் சமூகம் சார்ந்த விஷயங்களில் தமிழகம் முன்னிலை...

இந்தியாவில் சமூகம் சார்ந்த விஷயங்களில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவில் சமூகம் சார்ந்த விஷயங்களில் தமிழகம் முன்னிலை...

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஐக்கிய நாடுகளின் வழிமுறைகள் தமிழகத்தில் சரியாக பின்பற்றப்படுகிறது எனவும், அனைவருக்கும் அனைத்திலும் சம உரிமை என்பது தமிழகத்தில் பல சமூக மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போதும் சமூகம் சார்ந்த விஷயங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமைபட கூறினார்.