உலக நாடுகளுக்கு வழங்குவதை விட தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசி வழங்கப்படுகிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதை விட தமிழகத்திற்கு குறைவாக தடுப்பூசிகளையே மத்திய அரசு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.

உலக நாடுகளுக்கு வழங்குவதை விட தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசி வழங்கப்படுகிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் அகில இந்திய சிகை அலங்கரிப்பு சங்கத்தின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 100க்கும் மேற்பட்ட சிகை அலங்கார நிபுணர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு உலக நாடுகளுக்கு வழங்கியதை விட, தமிழகத்திற்கு குறைவான அளவு தடுப்பூசிகளையே ஒதுக்குவதாக குற்றம்சாட்டினார். மேலும் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிக தடுப்பூசிகளை ஒதுக்க திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.