வெப்ப சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு...இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு...இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பான அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : 30 அடி உயரத்தில் தோகை விரித்த மயில்...பார்வையாளர்களை ஈர்த்த 125-வது மலர் கண்காட்சி!

அதே சமயம் அப்பகுதிகளில் இன்று முதல் 20 ஆம் தேதி வரையிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.