தமிழகத்தில் புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 585ஆக  குறைந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 585 பேர் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 761 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 603ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் தொற்று பாதிப்பு குறைந்து 190ஆக பதிவாகியுள்ளது.