நாளை தொடங்குகிறது தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

பரபரப்பான  அரசியல் சூழலில்  தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  நாளை தொடங்குகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  தியாக ராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நாளை தொடங்குகிறது தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

பரபரப்பான  அரசியல் சூழலில்  தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  நாளை தொடங்குகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  தியாக ராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார். அதன் பிறகு ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம்  ஆளுனர்  பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது.  3 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் எம்எல்ஏக்களின்  கேள்விகளுக்கு  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார்.

அதன்பிறகு தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்ட நிலையில் கடந்த 4-ந் தேதி  நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 13 ஆம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக சட்டசபை பட்ஜெட்  கூட்ட தொடர் நாளை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் 14-ந்தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுவதால்  எம்.எல்.ஏ.க்களின் இருக்கை முன்பு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ,இது என்பதால்  என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும், வரிவிதிப்பு இருக்குமா? சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறுகிறது.