இது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டும், கடைக்காரர்கள் காலி செய்யாத நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று காலை தொடங்கினர். முதலில் கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், ஜெ.சி.பி இயந்திரம் மூலம் கடைகளை இடித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் துறை ஆணையர் குமரகுபரர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.