காயத்ரி பாஜகவில் இருக்கும்போது திமுகவை குறித்த பேச்சுக்களும் ட்வீட்களும்
காயத்ரி ராகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பாஜக கட்சியில் இருந்து வந்தார்
பாஜக கட்சியில் இருக்கும் போது அதாவது குறிப்பாக பிக் பாஸ் 1 கலந்துக்கொண்டபோது சகபோட்டியாளரிடம் சேரி பிஹேவியர் என பேச தொடங்கி சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு இவர் பேசக்கூடிய அரசியலிலும் ஒன்றன்பின் ஒன்றாக சர்ச்சையில் அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கக்கமாக வைத்திருந்திருந்தார்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசாக 5000 வழங்க சொன்ன திமுக...இப்போ 1000 வழங்க காரணம் என்ன? ஈபிஎஸ் கேள்வி!
பேச்சுக்களும் ட்வீட்களும்
1. சென்னை மேயர்( பிரியா ராஜன் ) பொறுப்பு ஒரு குழந்தையிடம் கொடுக்கப்பட்டுள்ளது 6 மார்ச் 2022 பேசினார்
2. பிடிஆர் உங்களை நீங்களே ட்வீட்டரில் Block செய்து கொள்ளுங்கள் -23 செப் 2021 அன்று ட்வீடரில் பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | அண்ணாமலை திமுக பிரமுகர்களுடன் சேர்த்து பேசினார், நான் போனது இரண்டு பாஜக நிர்வாகிகளோடு - காயத்ரி பேட்டி
3.கனிமொழிக்கு திமுகவில் முதல்வராக இருக்க இட ஒதுக்கீடு தருவார்களா? 22 செப் 2021 கேள்வி எழுப்பிருந்தார்.
4. திருமாவளவன் அவர்களே 27 ம் தேதி மெரினாவிற்கு நேரில் வந்து மிரட்டுங்கள் தைரியம் இருந்தால் 19 நவ 2019 எனவும் கூறினார்.
5. NEP( புதிய கல்வி கொள்கை) வருவதே தமிழை வளர்க்கதான் அதனை சிலர் தடுக்கின்றனர் - 29 அக் 2022 பேசியிருந்தார் .