சிக்கந்தரை செருப்பால் அடித்த சூர்யா தேவி... 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...

மதுரையை சேர்ந்த யூடியூபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் யூடியூபர் சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிக்கந்தரை செருப்பால் அடித்த சூர்யா தேவி... 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...

மதுரையைச் சேர்ந்த யூடியூபர் சிக்கா என்கிற சிக்கந்தருக்கும், பெண் யூடியூபரான சூர்யா தேவிக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியத்தில், மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் சிக்கந்தரை சூர்யா தேவி, செருப்பால் அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து, யூடியூப்பில் பதிவிட்டார்.

மேலும், தொடர்ந்து தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சிக்கந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சிக்கந்தர் அளித்த புகாரின் பேரில், சூர்யா தேவி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.