திடீரென திறக்கப்பட்ட தண்ணீர்... 3 பேர் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு...

பவானி ஆற்றில் வெள்ளம் திடீரென வந்ததால், நீரில் 3 பேர் சிக்கியதால், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திடீரென திறக்கப்பட்ட தண்ணீர்... 3 பேர் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகர் 
பகுதியைச் சேர்ந்தவர் சங்குவதி,இவரது மகள் கவிதா, பேத்தி சாதனா. இவர்கள் மூவரும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில்  துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். 
இந்த நிலையில் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக திடீரென தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது பவானி ஆற்றில் வெள்ளம் திடீரென வந்தது. இதை சற்றும் எதிர்பாராத மூவரும் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

ஆற்றின் மையப்பகுதியில் இருந்ததால் தாய் சங்குவதி மற்றும் மகள் கவிதா ஆகியோர் ஆற்று நீரின் வேகத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.  பேத்தி சாதனா  வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தாய் சங்குவதி மற்றும் மகள் கவிதாவை தேடினர்.