நாளை முதல் தொடங்குது புறநகர் ரயில் சேவை!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை முதல் தொடங்குது புறநகர் ரயில் சேவை!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து தெறு ரயிவ்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்சேவை தொடங்குகிறது எனவும், சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. பெண்கள் ,12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம் எனவும், ஆண்கள் Non Peak hoursல்  மட்டும் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் எனவும், காலை 9:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரவு 7:30 மணி முதல் கடைசி ரயில் செல்லும் வரை ஆண்கள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் மாஸ்க் அணியாமல் சிக்கினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயிவ்வே எச்சரித்துள்ளது.

அத்தியாவசிய மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.