தமிழகத்தில் ஜுன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்!!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக பாமக ஆதரவு அறித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 3 இடங்களில் திமுக தனது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்தது..
இந்த நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து மாநிலங்களவை தேர்தலுக்கு ஆதரவு கோரினர்.
இதனை ஏற்று அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அதேபோல் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் அதிமுக, பாமக பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதிமுக சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு வேட்பாளர் பெயர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.