இதற்காக 70.30 லட்சம் பேர் காத்திருப்பு...  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு...

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்காக 70.30 லட்சம் பேர் காத்திருப்பு...  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு...

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 32 லட்சத்து 93 ஆயிரத்து 401 ஆண்களும், 37 லட்சத்து 36 ஆயிரத்து 687 பெண்கள், 257 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர்.

அதேப்போல், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 27 ஆயிரத்து 948 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 77 ஆயிரத்து 839 நபர்களும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 213 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மொத்தம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 77 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 42 ஆயிரத்து 151 நபர்களும்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 53 ஆயிரத்து 447 நபர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.