பழங்குடியின மக்களுக்கான ரூ.4.53 கோடி நலத்திட்டம்...  முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்...

நரிக்குறவர் மற்றும் பழங்குடியின சமுகத்தை சேர்ந்த 282 நபர்களுக்கு, 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பழங்குடியின மக்களுக்கான ரூ.4.53 கோடி நலத்திட்டம்...  முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்...

சென்னை மாமல்லபுரம் அருகேவுள்ள பூஞ்சேரியில், நரிக்குறவர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த 282 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

81 நபர்களுக்கு 3 புள்ளி 52 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 21 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை, 88 பேருக்கு சாதிச்சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.

மேலும் 34 பேருக்கு நரிக்குறவர் சாதிச் சான்றிதழும், நரிக்குறவர் நலவாரிய அட்டைகளும், 25 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளும் வழங்கப்பட்டன.  இதுதவிர  12 நபர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ், தலா ஒரு  லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.  33 நபர்களுக்கு சிறுதொழில் செய்வதற்கென தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான வங்கிக் கடனுதவியும், கலைஞர் நல மேம்பாட்டுத்திட்டம் கீழ்  75 லட்சம் ரூபாய் முன்மொழிவு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

பின்னர் பழங்குடியின மக்களுடந் கலந்துரையாடிய ஸ்டாலின், அவர்களது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க செல்பி எடுத்துக்கொண்டார்.