நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் .. தமிழக மீனவர்களின் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் பொருட்கள் வழிப்பறி!!

வேதாரண்யம் மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற் கொள்ளையர்கள்  2 லட்சம் மதிப்புடைய பொருட்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் .. தமிழக மீனவர்களின் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் பொருட்கள் வழிப்பறி!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்த நேற்று 80-க்கும்   மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் ஆறுகாட்டுதுறைக்கு நேராக 6 முதல் 12 நாட்டிக்கல்மைல் தொலைவில் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது  5 பைபர் படகில் வந்த 20 இலங்கை கடற்கொள்ளை யர்கள்  3 பைபர் படகில் மீன்பிடித்து கொண்டு இருந்த 9 மீனவரை வழிமறித்து கத்தி கட்டிய மிரட்டி, மரகட்டையால் தாக்கியுள்ளனர்.

பின்னர்  படகில் ஏறி 2 லட்சம் மதிப்புடைய  மீன்பிடிவலைகள், திசைகாட்டும் கருவி, 3 செல்போன், டீசல் , பேட்ரி, லைட் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் ஆறுகாட்டுதுறைக்கு நேரிடையாக வந்து தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.