சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்...சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்...?

சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்...சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்...?

வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும், 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்புவதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் பல்வேறு முதலீட்டார்களை சந்தித்து மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார். 

இதையும் படிக்க : கோடை வெயிலில் மக்களை குளிர்வித்த ஆலங்கட்டி மழை...!

இந்நிலையில் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தமிழ்நாடு திரும்புகிறார்.  மேலும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர், நாளை திரும்பவுள்ள நிலையில், அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.