கைதிகள் வார்டுக்கு மாறுகிறார் சிவசங்கர் பாபா..?

சிவசங்கர் பாபாவை கைதிகள் வார்டுக்கு மாற்ற முடிவு

கைதிகள் வார்டுக்கு மாறுகிறார் சிவசங்கர் பாபா..?
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா-வின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் சிகிச்சை வார்டுக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில் சிவசங்கர் பாபா-விற்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த 19 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சிவசங்கர் பாபா-வின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு விரைவில் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.