விசாரணைக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு ஓடிய சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள்.!  

விசாரணைக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு ஓடிய சுஷில் ஹரி  பள்ளி ஆசிரியைகள்.!  

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியை சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்ட சம்மனை பெறாமல் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓட்டம்.

பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா வின் பாலியல் லீலைகளுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை காயத்ரி மற்றும் அங்கு பணிபுரியும் பிரவீனா உள்ளிட்ட சிலர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத படி சம்மனை வாங்காமல் வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதனால் . கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள இவர்களது இல்லங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கு பயந்து தப்பி ஓடிய இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரியவருகிறது.