லாரி கதவை திறந்தபோது அடித்த ஷாக்....  லாரி டிரைவர் பரிதாப பலி...

நாகர்கோவிலில் சாலையோரம் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு பின் கதவை திறந்த லாரி ஓட்டுநர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரி கதவை திறந்தபோது அடித்த ஷாக்....  லாரி டிரைவர் பரிதாப பலி...

கன்னியாகுமரி மாவட்டம்  பூதப்பாண்டி மேலவிலாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 46 இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் லாரி ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று  மாலை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலை பள்ளி அருகே சாலை ஓரம் பார்சல் இறக்குகுவதற்காக கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு பின் கதவை திறந்தபோது எதிர்பாராத விதமாக லாரி பின் கதவு சாலையோரம் இருந்த மின்மாற்றியில் கதவு உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் துடிதுடித்து மயங்கி விழுந்தார்.

இதனை கண்ட பொதுமக்கள் மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.