12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...இரண்டு பேர் போக்சோவில் கைது....

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்மம் செய்த இருவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...இரண்டு பேர் போக்சோவில் கைது....

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எம்.சூரக்குடியில் கூலி வேலை செய்து வரும் ஒரு தம்பதியினருக்கு 3 பெண்குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையுள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாகவே  கணவன், மனைவி  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர்.

அதன்படி தாய் தனது 12 வயதுடைய மூத்த பெண் மற்றும் 6 வயது ஆண் குழந்தைகளை கணவனிடம் விட்டு விட்டு மற்ற இரு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு  சிவகங்கை அருகில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இரண்டு சிறுமிகளில் ஒருவர், அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி விடுமுறை அன்று அந்த சிறுமி அருகில் உள்ள வயலில் மாடு மேய்க்க சென்று வருவதாக சொல்லப்படுகிறது.

அப்படி செல்லும்போது அதே ஊரை சேர்ந்த கணபதி என்பவர் சிறுமிக்கு அவ்வப்போது சாக்லேட் மற்றும் உணவு வாங்கி கொடுத்து பலமுறை பாலியல் தொல்லை செய்துள்ளார். இது சிறுமியின் தாய்க்கு தெரியவரவே, அதிர்ச்சியடைந்த அவர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கணபதியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதில் கைது செய்யப்பட்ட கணபதியுடன் சேர்ந்து, பிரபு என்பவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள், கணபதியுடன் சேர்த்து பிரபுவையும் கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.