"பார்களுக்கு சீல்" கண்துடைப்பு நாடகம்!

"பார்களுக்கு சீல்" கண்துடைப்பு நாடகம்!

திண்டுக்கல்லில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்ட மதுபான பார்களுக்கு கண்துடைப்பிற்காக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்து சென்ற காட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள் கள்ளச் சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட அனுமதி இல்லாத மதுபான பார்களுக்கு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் தலைமையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து அனுமதி இல்லாத மதுபானபார்களுக்கு சீல் வைக்க சென்றனர். இந்நிலையில் மூன்று கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் அவற்றில் இரண்டு கடைகளில் பூட்டே போடாமல் வெறும் துணியை மற்றும் சுற்றி கண்துடைப்பு நாடகம் நடத்திச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் சம்பவத்தால் தமிழகமே பரபரப்பாக காணப்படும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்ட விரோத மதுபான பார்களுக்கு நடவடிக்கை என்ற பெயரில் நாடகம் நடத்திச் சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க:புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளை..! டிப்பர் லாரியை சிறைபிடித்த மக்கள்...!