திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர்கள் ஆரோக்கியசாமி, மரியபாக்கியம் தம்பதி. இவர்களுக்கு மரியயாகோப், அமல்ராஜ், லூர்துராஜ் என 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஆரோக்கியசாமியிடம், அவரது மூன்றாவது மகன் லூர்துராஜ் சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மீண்டும் இதுதொடர்பாக நடந்த மோதலில் ஆரோக்கியசாமியை லூர்துராஜ் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது தாய் மரியபாக்கியம் மற்றும் சகோதரர் மரிய யாகோபையும் தாக்கியுள்ளார்.