தந்தையை மகனே அரிவாளால் வெட்டும் பதைபதைக்கும் காட்சி...

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தையை மகனே அரிவாளால் வெட்டும் பதைபதைப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

தந்தையை மகனே அரிவாளால் வெட்டும் பதைபதைக்கும் காட்சி...
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர்கள் ஆரோக்கியசாமி, மரியபாக்கியம் தம்பதி. இவர்களுக்கு மரியயாகோப், அமல்ராஜ், லூர்துராஜ் என 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஆரோக்கியசாமியிடம், அவரது மூன்றாவது மகன் லூர்துராஜ் சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மீண்டும் இதுதொடர்பாக நடந்த மோதலில் ஆரோக்கியசாமியை லூர்துராஜ் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது தாய் மரியபாக்கியம் மற்றும் சகோதரர் மரிய யாகோபையும் தாக்கியுள்ளார்.

 
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனைக்கண்ட லூர்துராஜ் தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்த ஆரோக்கியசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாணார்பட்டி போலீசார் தப்பியோடிய லூர்துராஜை தேடி வருகின்றனர். சொத்து பிரச்னை காரணமாக ஒரு குடும்பமே அடித்துக் கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.