கொரோனாவுக்கு 'bye' சொல்லுங்க.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு வெறும்....?

தமிழகத்தில் புதிதாக 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு 'bye' சொல்லுங்க.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு வெறும்....?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நேற்றைய நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 320 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 45 பேருக்கும், செங்கல்பட்டில் 36 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 946 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 7 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது.  

அதே சமயம், கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து ஒன்பது ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் நான்காயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.