தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது..? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்  எப்போது..?   அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 


சென்னையில் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு நடப்பாண்டு இறுதிக்குள் நகர்ப்புற தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் சென்னை முழுவதும் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.