நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்... சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்படும்...

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நாளை தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்... சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்படும்...

எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெறும் என கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பு கூட்டத்தொடர் நாளை நிறைவடைய உள்ளது என்றும், அப்போது நடைபெற உள்ள கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார்.