குடியரசு - இறையாண்மை - பி.ஆர். அம்பேத்கர்

குடியரசு - இறையாண்மை - பி.ஆர். அம்பேத்கர்

குடியரசு - இறையாண்மை 

1946 டிசம்பரில் அரசியல் நிர்ணய சபையில் பேசிய பி.ஆர்.அம்பேத்கர், குடியரசு என்ற சொல்லுக்கு இறையாண்மை என்பது மக்களிடமிருந்து உருவானது என்று கூறினார். அப்போது அவர், இந்து-முஸ்லிம் பிரச்னைகளைத் தீர்க்க போர் தொடுப்பது குறித்து சில தலைவர்கள் பேசுவது குறித்து கவலை தெரிவித்தார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு குடியரசில் மக்களிடமிருந்து வரும் அதிகாரம் நம்பிக்கையின் பெயரால் ஒருபோதும் போருக்கு வாய்ப்பளிக்காது.

மேலும் படிக்க | 73 - வது குடியரசு தினத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவுக்கூறல்

துரதிர்ஷ்டவசமாக, முஸ்லிம்கள் இழிவுபடுத்தப்படக் கூடிய நச்சு சூழல் குறித்த அம்பேத்கரின் அச்சம் உண்மையாகி வருகிறது. 1945 இல் அம்பேத்கரின் இந்திய ஐக்கிய நாடுகளுக்கான அரசியலமைப்பை நினைவு கூர்வது மதிப்புக்குரியது. அதன் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்புக்கான அழைப்பு கடுமையான தண்டனையை ஈர்க்கும் என்று குறிப்பிட்டது. சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்பைக் கடுமையாகக் கையாள்வதற்கு நாட்டில் சட்டங்கள் இருக்க வேண்டும் என்றும் அம்பேத்கர் கூறினார்.

Ambedkar memorial, டிசம்பர் 6: அம்பேத்கருக்கு மரியாதை செய்ய என்ன தகுதி  வேண்டும்? - bhim rao ramji babasaheb ambedkar memorial day article -  Samayam Tamil

அரசியல் நிர்ணய சபை

அரசியல் நிர்ணய சபையில், அம்பேத்கர் முஸ்லிம்களுடன் மோதலை தூண்டும் எந்தவொரு முயற்சியும் பெரிய அளவிலான அழிவை விளைவிக்கலாம் என்று எச்சரித்திருந்தார். இந்தியா என்பது இந்துக்களின் பித்ருபூமி (பிறந்த இடம்) மற்றும் புண்யபூமி (வழிபாட்டுத் தலம்), முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பித்ருபூமி மட்டுமே என்ற புரிதலில் வேரூன்றிய வி டி சாவர்க்கரின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவரால் கணிக்க முடிந்தது.

மேலும் படிக்க | தேசத்திற்கான கனவை உண்மையாக்க...பிரதமர் மோடி சொன்னது என்ன?

சுதந்திர தினம் இருக்கும்போது குடியரசு தினத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்  ?” - ஒரு சிறப்பு பார்வை !

அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. CAA எதிர்ப்பு இயக்கங்களின் போது மக்கள் அரசியலமைப்பின் முன்னுரையை வாசிக்கும் விதம் குடியரசு மீதான நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது மற்றும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற கருத்துக்களைக் கொண்டாடுவதற்கான காரணத்தை அளிக்கிறது. குடியரசின் ஆண்டு விழாவில், மதவாத சக்திகளின் தாக்குதலில் இருந்து அரசியலமைப்பின் பார்வையை நாம் பாதுகாப்பது இன்றியமையாதது.

 ரதி ராஜேந்திரன்