பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் இன்று அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு தொடங்கியது.

பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் இன்று அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு தொடங்கியது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி, கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற நிலையில், அதற்கான மறு தேர்வு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி - மார்ச் மாத செமஸ்டரில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக மறு தேர்வு நடத்தப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு Open Book முறையில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முடிந்த உடன், விடைத்தாள்களை Scan செய்து PDF வடிவில் அனுப்பி வைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசல் விடைத்தாளையும் விரைவு அஞ்சல் மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.