ரேஷன் கடைகளில் ரூ.2000 வழங்கும் பணி தொடருமா?

ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை என உணவுத்துறை தெரிவித்துள்ளது

ரேஷன் கடைகளில் ரூ.2000 வழங்கும் பணி தொடருமா?

ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை என உணவுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனோ தொற்றின் காரணமாக தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் இரண்டாவது தவணை தொகையாகவும், 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் கடந்த 15ம் தேதி முதல்  வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், கடந்த 22ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். அதில் வரும் 25ம் தேதிக்குள் 2,000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், அதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை என்றும் தற்போது உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.