வெளிநாட்டில் உயிரிழந்த கணவர் உடலை மீட்டுத்தரக்கோரி ஒன்றரை வயது குழந்தையுடன் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை...

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று பணியில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி, மனைவி ஒன்றரை வயது குழந்தையுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் 3-வது முறையாக மனு அளித்துள்ளார். 

வெளிநாட்டில் உயிரிழந்த கணவர் உடலை மீட்டுத்தரக்கோரி ஒன்றரை வயது குழந்தையுடன்  மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த பென்னகோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்ததாக தொழிற்சாலையில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் குடும்பத்தினர் உடலை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் 3-வது முறையாக மீண்டும் கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி அவருடைய மனைவி ஒன்றரை வயது குழந்தையுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.