சாலையில் தேங்கிய மழைநீர்: அடைப்பை எடுத்துவிட்ட போலீசார்!

சென்னையில் கன மழையால் ஏற்பட்ட தண்ணீர் தேக்கத்தை சரிசெய்ய கால்வாய் அடைப்பை தோண்டி எடுத்த போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.  

சாலையில் தேங்கிய மழைநீர்:  அடைப்பை எடுத்துவிட்ட போலீசார்!

சென்னையில் கன மழையால் ஏற்பட்ட தண்ணீர் தேக்கத்தை சரிசெய்ய கால்வாய் அடைப்பை தோண்டி எடுத்த போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.

சென்னையில் இன்று காலை 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதே போல் அண்ணா மேம்பாலம் அருகே மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டு வந்த காவலர்கள் மோகன் ராஜ் மற்றும் வின்சன்ட் ஆகியோர் தாங்களாவே முன்வந்து கால்வாய் அடைப்பை குச்சியால் தோண்டியெடுத்து சரி செய்தனர்.

இதனை கண்ட வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களை வெகுவாக பாராட்டினர். காவலர்கள் கால்வாய் அடைப்பை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதுடன் பொதுமக்கள் பலரின் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.